states

img

‘ஒரு நாடு’, ‘ஒரு மொழி’, ‘ஒரு மதம்’ வரிசையில் ‘ஒரே சீருடை!’

சண்டிகர், அக். 28 - நாடு முழுவதும் காவல்துறைக்கு ஒரே விதமான சீருடை அவசியம் என்று  பிரதமர் மோடி மீண்டும் பேசியுள்ளார். கூட்டாட்சி முறைக்கு எதிராகவும், காவல்துறை அதிகாரங்களை ஒன்றிய அரசு வசம் எடுத்துக் கொள்ளும் திட்டத்தின் ஒருபகுதியாகவும் இந்தக் கருத்தை அவர் முன்வைத்துள்ளார். மாநில முதல்வர்கள், உள்துறை அமைச்சர்கள், அரசுத்துறை செய லாளர்கள், காவல்துறை டிஜிபி-க்கள்  பங்கேற்கும் ‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் இரண்டு நாள் ‘சிந்தனை அமர்வு  மாநாடு’ ஹரியானாவின் சூரஜ்குண்ட்  நகரில் வியாழக்கிழமைதொடங்கியது.  காவல்துறை நவீனமயம், சைபர் கிரைம் மேலாண்மை, குற்றவியல் நீதி  அமைப்பில் தகவல் தொழில் நுட்ப  பயன்பாடு, கடலோரப் பாதுகாப்பு,  பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் பொதுவான கொள்கைகளை உருவாக்கவே இந்த  மாநாடு என்று கூறினாலும், உண்மை யில், கூட்டாட்சி முறையைக் குலைத்து,  மாநில அரசுகளிடமுள்ள சட்டம் - ஒழுங்கு அதிகாரத்தை மெல்ல மெல்ல ஒன்றிய அரசின் வசம் கொண்டு செல் வதற்கான முயற்சியே இந்த சிந்தனை அமர்வு விமர்சனங்கள் எழுந்தன.

அதற்கேற்பவே, இந்த மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்  ஷா, “நமது அரசியல் சாசனத்தின்படி, சட்டம் - ஒழுங்கு மாநில அதிகாரத்தின் கீழ் வருகிறது என்றாலும், குற்றங் களைத் திறம்பட எதிர்கொள்வது ஒன்றிய - மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு” என்று மிகவும் அழகாக முடிச்சவிழ்த்தார். “விரைவில் ஒவ் வொரு மாநிலத்திலும் தேசிய புல னாய்வு முகமையின் (NIA) கிளை அலு வலகங்கள் அமைக்கப்படும்” என்று  தங்களின் எதேச்சதிகாரத் திட்டத்தை யும் வெளிப்படுத்தினார். இந்நிலையில், சிந்தனை அமர்வின் இரண்டாவது நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா வைப் பின்தொடர்ந்து, கூட்டாட்சிக்கு எதிரான தங்களின் ஒற்றை இந்தியா நிகழ்ச்சி நிரலை அச்சு பிசகாமல் முன்வைத்துள்ளார். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ஓய்வூதியம், ஒரே குடும்ப அட்டை, ஒரே கல்விமுறை, ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே தேர்தல் என்ற வரிசையில், “நாடு முழுமைக்கும் ஒரே காவல்துறை சீருடை வேண்டும்” என்று பேசியுள்ளார்.

“உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயங் களில் புதிய கொள்கைகளை உரு வாக்குவதன் முயற்சியே சிந்தனை முகாம். சட்டம், ஒழுங்கு என்பது ஒரு மாநிலத்துடன் நின்றுவிடக் கூடியது அல்ல, அதனையும் தாண்டியதாக மாறி விட்டது. குற்றங்கள் மாநிலங்களுக்கு இடையே மாறி வருகிறது. தொழில் நுட்பத்தால், குற்றவாளிகள் இப்போது மாநிலங்களில் குற்றங்களைச் செய்ய  அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். எல்லை தாண்டிய குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்.  எனவே, நாட்டில் சட்டம், ஒழுங்கு  வலுப்படுத்த, பல்வேறு மாநில காவல்துறையினருக்கு இடையேயான தொடர்பை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் காவலர்களுக்கு ஒரே சீருடை எனும் யோசனை சாத்தியமா? என்பதை மாநிலங்கள் ஆலோசிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து ஒரே காவலர் சீருடை யை உருவாக்க வேண்டும். இது, காவல ருக்கான பொதுவான அடை யாளத்தை உருவாக்குவதுடன் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும். மாநிலங்கள் ஒன்றிணைந்து கற்றுக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல் படலாம். இதனால் ஒருவருக்கொருவர் உத்வேகம் பெறலாம் மற்றும் நாட்டின்  முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படலாம் - இது அரசியலமைப்  பின் உணர்வு மற்றும் நமது குடிமக்களுக் கான நமது கடமை” என்று பிரதமர் மோடி பசப்பியுள்ளார்.

மேலும், “சட்டத்தை மதிக்கும் குடி மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை களுக்காக, எதிர்மறை சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது நமது பொறுப்பு” என்று கூறி யிருக்கும் பிரதமர் மோடி, “பயங்கர வாதத்தின் அனைத்து வடிவங்களை யும் நாம் தோற்கடிக்க வேண்டும். அது துப்பாக்கி ஏந்தியிருந்தாலும் அல்லது பேனாவை ஏந்தியிருந்தாலும், அனைத்திற்கும் நாம் தீர்வு காண வேண்டும்” என்று தூண்டும் வகை யில் பேசியுள்ளார். “அடுத்த 25 ஆண்டுகள் ‘அமிர்த பீதி’ உருவாக்கப்படும். வளர்ந்த இந்தி யாவை உருவாக்குதல், அனைத்து காலனித்துவ மனநிலையிலிருந்தும் விடுதலை, பாரம்பரியத்தின் பெருமை, ஒற்றுமை மற்றும் மிக முக்கிய மாக, குடிமகன் கடமை ஆகிய ‘பஞ்ச்  பிரான்’ தீர்மானங்களை உள்வாங்கு வதன் மூலம் இந்த ‘அமிர்த பீதி’ உரு வாக்கப்படும்” என்றும் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோ ரின் உரை நாடு முழுவதும் விவாதங் களை ஏற்படுத்தியுள்ளது. 

2017 முதலே நடைபெறும் முயற்சி

‘ஒரே காவல்துறை; ஒரே சீருடை’ என்பதற்கான முயற்சியை கடந்த 2017-ஆம் ஆண்டே மோடி அரசு துவங்கி  விட்டது. குஜராத் மாநிலம் அகமதாபா த்தில் உள்ள ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்’ நிறுவனம் மூலம் ஒன்பது  விதமான சீருடைகளையும் வடி வமைத்தது. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Bureau of Police Research and  Development - BPR&D) ஆலோசனை யுடன், ‘பேண்ட், சட்டை, மழை கோட், ஹெல்மெட்’ உட்பட அனைத்தை யும் குஜராத் நிறுவனம் மூலமாக வடிவமைத்து பெற்றது.  இதுதொடர்பாக, தேசிய பாது காப்புக் கவுன்சில் (National Security Council - NSC) கடந்த மே 2 அன்று மாநில  காவல்துறை தலைவர்களுக்கு (DGP) இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியது. அதில், அந்தந்த மாநில காவல்துறையின் சீருடை, அணியும் தொப்பி, சின்னங்கள் உள்‘ஒரே காவல்துறை; ஒரே சீருடை’ என்பதற்கான முயற்சியை கடந்த 2017-ஆம் ஆண்டே மோடி அரசு துவங்கி  விட்டது. குஜராத் மாநிலம் அகமதாபா த்தில் உள்ள ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்’ நிறுவனம் மூலம் ஒன்பது  விதமான சீருடைகளையும் வடி வமைத்தது. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Bureau of Police Research and  Development - BPR&D) ஆலோசனை யுடன், ‘பேண்ட், சட்டை, மழை கோட், ஹெல்மெட்’ உட்பட அனைத்தை யும் குஜராத் நிறுவனம் மூலமாக வடிவமைத்து பெற்றது.  இதுதொடர்பாக, தேசிய பாது காப்புக் கவுன்சில் (National Security Council - NSC) கடந்த மே 2 அன்று மாநில  காவல்துறை தலைவர்களுக்கு (DGP) இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியது. அதில், அந்தந்த மாநில காவல்துறையின் சீருடை, அணியும் தொப்பி, சின்னங்கள் உள்

சட்டங்களைத் திருத்தவும் தன்னிச்சையாக குழு

மாநில அரசுகளைக் கலந்தாலோ சிக்காமல், இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973,  மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவற்றை மறுஆய்வு செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதத்தில் குழு ஒன்றை அமைத்தது. அப்போதும், சட்டம் - ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், தங்களை கலந்து ஆலோசிக்கா மலேயே, ஒன்றிய அரசு தன்னிச்சையாக ஆய்வுக் குழுவை அமைத்திருப்பதாக குற்றச் சாட்டு எழுந்தது. உள்துறை விவ காரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வும், மாநிலங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் இதுதொடர்பாக ஆலோசித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. எனினும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவே மோடி அரசு அடுத்தடுத்து தனது காய்களை நகர்த்தி வருகிறது. காவல்துறையின் சீருடை எவ்வாறிருக்க வேண்டும் என்பதும், அதனை மாற்றியமைப்பது தொடர்பாக முடிவு செய்ய வேண்டியதும் மாநிலங்களின் விருப்பம், உரிமை சார்ந்தது. அதற்கான அதிகாரத்தை அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.